அரசியல்

அரசுக்கு எதிரான போராட்டம்! – ஊடகவியலாளர்கள் உட்பட 103 பேர் காயம்

Published

on

ஜனாதிபதி தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி அரசுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தோரில் சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். மேலும் 55 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் 05 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version