இலங்கை

பண்ணை கடற்கரையில் மிதந்த முதியவர் சடலம்!

Published

on

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் முதியவரின் சடலமொன்று இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக சென்றபோது சடலமொன்று மிதப்பது இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டது. இதனையடுத்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலத்தை பார்வையிட்ட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், முதியவர் தீவகப்பகுதியைச் சேர்ந்த யாசகம் பெறுபவராக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version