அரசியல்

ஆணவபோக்கே அழிவுக்கு காரணம் – சஜித் சீற்றம்!

Published

on

நாட்டின் ஆட்சியாளர்கள் கடந்த 03 ஆண்டுகளில் மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்காமல், தாங்கள் மட்டும் தான் சரியென்று எண்ணிச் செயற்பட்டமையால் நாடு தற்போது அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வாதிகாரமின்றி அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியுமெனவும், அதற்காக முற்போக்குக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் யோசனைகளையும் செவிமடுப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், பன்முகப்படுத்தப்பட்ட யோசனைகளை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இறுதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகுமெனவும் அந்த நிகழ்ச்சி நிரலினூடாக நாட்டு மக்கள் இழந்த மூச்சை மீண்டும் வழங்க முடியுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version