இலங்கை

பொதுப் போக்குவரத்தை ஊக்குவியுங்கள்! – சுரேன் ராகவன் வேண்டுகோள்

Published

on

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையை பலப்படுத்தி, மக்கள் அதனை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 70 வீதம் தனியார் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. 10 வீதம்தான் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றது. எமது நாட்டு மக்களும் பொதுபோக்குவரத்துக்கு பழக்கப்பட வேண்டும் .

எனவே, குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாத்திரம் தனியார் வாகனங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். ஏனைய நாட்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.” – என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version