இலங்கை
அடுத்த வாரம் முதல் விவசாயிகளுக்கு யூரியா விநியோகம்!
இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா அடுத்த வரமளவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா 10,000 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
தற்போது யூரியா மூட்டையொன்றின் விலை சந்தையில் 42 ஆயிரமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் உரத்தை பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிய கப்பல் இலங்கை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தக் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து உரத்தை விநியோகிக்க முடியும் – என்றார்.
You must be logged in to post a comment Login