அரசியல்
சர்வக்கட்சி அரசை அமைக்குமாறு சபையில் யோசனை!
மகாநாயக்க தேரர்கள் முன்வைத்துள்ள யோசனையை ஏற்று சர்வக்கட்சி அரசை அமைக்க ஒத்துழைப்பு வழங்க நாம் தயார் – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று சர்வக்கட்சி அரசு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தற்போதைய அரசு சர்வக்கட்சி அரசு அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சர்வக்கட்சி அரசை உடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விமல் வீரவன்ச எம்.பியும் வலியுறுத்தினார்.
You must be logged in to post a comment Login