இலங்கை
மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க?
மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்கவை நியமிக்குமாறு பரிந்துரை செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக பணிபுரிந்த நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இன்று ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதையடுத்து மீண்டும் அவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு பிரதமர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு நிதியமைச்சரின் பரிந்துரை தேவைப்படுவதால் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நந்தலால் வீரசிங்கவை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.
You must be logged in to post a comment Login