இலங்கை

யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் பெற்றோல் திருட்டு!

Published

on

யாழ். நகர் பகுதியில் யாழ். மாநகர சபை பெண் உறுப்பினர் உள்ளிட்ட இருவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஒழுங்கமைப்பில் உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

அதில் பங்கேற்க சென்ற பெண் உறுப்பினர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்தே பெட்ரோல் திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளருக்கு முறைப்பாடு அளிக்கப்ட்ட நிலையில், பாதுகாப்பு கமராக்களின் உதவிகளுடன் விசாரணைகளை முன்னெடுப்பதாக முகாமையாளர் உறுதி அளித்துள்ளார்.

தாம் நீண்ட வரிசைகளில் பல மணி நேரங்களை செலவழித்து, காத்திருந்து சிறுக சிறுக சேமித்த பெட்ரோல் திருடப்பட்டுள்ளமையால் கடும் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம் என உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version