இலங்கை

குருநாகலைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் கொழும்பில் மாயம்!

Published

on

குருநாகல் மாவட்டம், மாவத்தகம பிரதேச செயலகத்துக்குட்பட்ட மெல்வத்த வேஉடப் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஹமட் நஸ்லான் என்ற பெயருடைய இளைஞர் ஒருவர் கடந்த 8ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து காணாமல்போயுள்ளார்.

கொழும்பில் பிட்டிங் தொழில் புரிவதற்காக வந்திருந்த குறித்த இளைஞர் தம் நண்பர் சகிதம் ஊருக்குச் செல்வதற்காகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை வந்தார் எனவும், இவருடைய நண்பர் இருவருக்குமான ரயில் பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு வந்து பார்த்த தருணத்தில் ஆள் காணாமல்போயுள்ளார் எனவும் கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பற்றிய தகல்வகள் கிடைக்கமாயின் அவருடைய தந்தை எம். டி. சாலிஹீன் 0758005637 அல்லது அவருடைய உறவினர் ஏ.எம். முஜாஹிரின் 0772820820 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு குடும்பத்தினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version