இலங்கை
விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!
அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
இன்று புதன்கிழமை (15) காலை அச்சுவேலி சந்தையில் இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர், விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
You must be logged in to post a comment Login