அரசியல்

இல ‘9’ இல் ராஜபக்சகளுக்கு கண்டம்! – வைரலாகும் பதிவு

Published

on

ராஜபக்ச குடும்பத்துக்கு பொருந்தாத நாளாக ’09’ ஆம் திகதி மாறியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

குறிப்பாக ’09’ ஆம் திகதி ராஜபக்சக்களுக்கு வலி தந்த நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது என பலரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

மே – 09 ஆம் திகதி, பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார். மஹிந்தவின் 52 வருடகால அரசியலில் அந்நாள் அவருக்கு பெரும் கருப்பு புள்ளியாக அமைந்தது.

ஜுன் 09 ஆம் திகதி பஸில் ராஜபக்ச, தேசிய பட்டியல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். 21 வந்தால் ஆபத்து என்பதை அறிந்த அவர், முன்கூட்டியே விடைபெற்றுள்ளார்.

எனவே, ஜுலை 09 ஆம் திகதி என்ன நடக்கும், ஜனாதிபதி பதவி விலகுவாரா என சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version