இலங்கை

கோர விபத்தில் தாயும் மகளும் சாவு! – தந்தையும் மகனும் படுகாயம்

Published

on

ஏ – 9 பிரதான வீதியின் கவரக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

பலத்த காயமடைந்த தந்தை மற்றும் 11 வயதான மகன் ஆகியோர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள், பயணித்த ஓட்டோ இன்று அதிகாலை 5.29 மணியளவில் கவரக்குளம் பிரதேசத்திலுள்ள ஓடையொன்றுக்குள் குடைசாய்ந்துள்ளது.

ஓட்டோ சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் 40 வயதான தாயும் 13 வயதான மகளுமே உயிரிழந்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version