இலங்கை
சிறுமி கொலை! – இன்று ஒருவர் கைது
பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயதான சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் 29 வயதான இளைஞர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிறுமியின் உறவினர் என தெரியவருகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னரும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிறுமியின் மரண பரிசோதனை தற்போது இடம்பெறுகின்றது.
You must be logged in to post a comment Login