இலங்கை

சிறுமி கொலை! – பிரதான சந்தேக நபர் அடையாளம்

Published

on

பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பண்டாரகம, அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புகொண்டுள்ளார்.

குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமி, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version