அரசியல்

இலங்கைக்குப் பிரிட்டனும் உதவி! – ரணிலிடம் போரிஸ் உறுதி

Published

on

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும் இடையில் தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின்போது, இலங்கையின் தற்போயை நிலைமை குறித்து போரிஸ் ஜோன்சனுக்குத் தான் விளக்கமளித்தார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கைக்கு உதவுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version