இலங்கை

வட்டுக்கோட்டையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

Published

on

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார்ர் தெரிவித்துள்ளனர்.

76 மற்றும் 73 வயதுகளையுடைய இருவரே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாட்களுக்கு முன்னரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

குறித்த வீட்டில் இருவர் மட்டுமே வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவிக்கு யாரும் இருந்ததில்லை என்றும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்றபோதே அவர்கள் இருவரும் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.

இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version