இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!!!

Published

on

நாட்டில் ஆங்காங்கே பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் சிலரது கட்டுக்கடங்காத மோசமான செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களை சிலர் மிரட்டுவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவோதுன்ன தெரிவித்தார்.

அதன்படி இந்த நிரப்பு நிலையங்களுக்கான அனைத்து எரிபொருள் வழங்கல்களும் இரத்துச் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறான மிரட்டல் மற்றும் மோசமான கட்டுக்கடங்காத செயல்கள் தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீது ஐந்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக நாவோதுன்ன மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் சீராக நடைபெற பொதுமக்கள் ஆதரவு அளிக்காவிட்டால், மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version