அரசியல்
அவசரகாலச் சட்டம் நீக்கம்! – ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு
நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு முதல் நீக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 6ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
நாட்டில் அன்றாடச் செயற்பாடுகளை பேணுவதற்கும், மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை வழங்குவதற்கும், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்துக்கமைய அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
You must be logged in to post a comment Login