அரசியல்

புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் அரசு செயற்பட வேண்டும்!! – சித்தார்த்தன் தெரிவிப்பு

Published

on

” புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் அரசு செயற்பட வேண்டும். அப்போது அவர்களால் துணிந்து முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” புலம்பெயர் தமிழர்கள் கடந்தகாலங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தாலும், அவர்களுக்கு தடைகள் ஏற்பட்டன, உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்நிலைமை மாற வேண்டும். அப்போது பொருளாதார எழுச்சிக்கு அவர்களின் முதலீடுகளை பெறக்கூடியதாக இருக்கும்.” – எனவும் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார்.

ரணில் நல்லவர். இருந்தாலும் தனித்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் மந்திரவாதி கிடையாது. எனவே, அனைவரையும் அரவணைத்த செல்ல முற்பட வேண்டும். சவாலை எதிர்கொள்ளும் ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version