அரசியல்

மே 09 வன்முறை! – அமைச்சர் வீட்டில் நகையும் திருட்டு

Published

on

மே – 09 வன்முறை சம்பவத்தின்போது, ஆளுங்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்றும் காணாமல்போயுள்ளது.

அனுமதிப் பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரால், அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version