இலங்கை

ஒரு பக்கம் மின்தடை; மறுபக்கம் நீர்வெட்டு! – கொழும்பு மக்களுக்கு அறிவுறுத்து

Published

on

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (21) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8 மணி வரை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் கொழும்பு 1 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version