அரசியல்

தமிழினப் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

Published

on

தமிழினப் படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகின்றது.

வருடாந்தம் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேநேரம், ‘இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி’ என்ற தொனிப்பொருளில் பொத்துவிலிலும், பொலிகண்டியிலும் ஆரம்பித்த நடை பவனிகள் இன்று முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version