அரசியல்
ரணில் இன்று மக்களுக்கு விசேட உரை!
இலங்கையின் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டு பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் உண்மையான நிலைமைகள் மற்றும் நெருக்கடிக்குத் தீர்வு கண்டு இலங்கையை மீண்டும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உரையாற்றும்போது தெரிவிப்பார் எனப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
You must be logged in to post a comment Login