அரசியல்

ஊரடங்கு நேரம் திருத்தம்! – இன்று இரவு 11 மணிக்கே அமுல்

Published

on

பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க, நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 11 மணி முதல், நாளை (17) அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துபூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்தப் பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

 

 

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version