அரசியல்

கொழும்பில் பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

Published

on

கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஆமர் வீதி அடுக்குமாடிக் குடியிருப்புத் தொடருக்கு அருகில் நபர் ஒருவர் இன்று பகல் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆமர் வீதி, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 42 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை கொட்டாஞ்சேனைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version