அரசியல்

ரணிலுக்குத் தோள்கொடுக்க எம்.பிக்களாகும் ஐ.தே.க. உறுப்பினர்கள்?

Published

on

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்கவுள்ளனர் என்று கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமராகப் பதவியேற்றுள்ள தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியாக இவர்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 6 பேர் பதவி விலகச் செய்வதற்காக தற்போது அவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அவர்கள் பதவி விலக இணங்கும் பட்சத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் எம்.பிக்களாகப் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மருந்து, உரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version