அரசியல்
துப்பாக்கிச் சூட்டு அனுமதி மீளப்பெறப்படும் – ரணில் உறுதி!
நாட்டில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீளப்பெறப்படும்.
இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், அண்மையில் சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.
இந்தநிலையில் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வன்முறையை கட்டுப்படுத்த முப்படையினருக்கும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது.
இது தொடர்பில், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பிரதமர் ரணிலிடம் கேள்வி எழுப்பியவேளையே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும், கலவரங்கள் மீண்டும் ஏற்பட்டால் மாத்திரமே பாதுகாப்பு படையினருக்கு இவ்வாறான உத்தரவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login