அரசியல்

ஆதரவு வழங்குமாறு கோரி சஜித்துக்கு ரணில் கடிதம்!

Published

on

புதிய அரசில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறும் அவர் அந்தக் கடிதத்தின் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசில் எவ்வித அமைச்சுப் பதவியும் ஏற்கப்படமாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version