அரசியல்

ரணிலுக்கு ‘மொட்டு’ ஆதரவு! – காரியவசம் உறுதி

Published

on

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவளிக்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. இதனை உறுதிப்படுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றக் குழு இன்று (14) காலை 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்கவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவியின் கீழான அரசில் இணைந்து கொள்வதில் இருந்து விலகி இருக்க அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் தீர்மானித்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version