அரசியல்
சஜித் – மைத்திரி ரகசிய பேச்சு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விருவரும் நேற்றிரவு தொலைபேசி ஊடாக மந்திராலோசனை நடத்தியுள்ளனர்.
இடைக்கால அரசு, புதிய பிரதமர் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
சஜித் பிரதமரானால், அவருக்கு ஆதரவு வழங்குவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login