அரசியல்

பிரதமராகிறார் ரணில்?

Published

on

பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளாரென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி இன்றிரவு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். ஏனைய தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்தார். எனினும், எவரும் உடன்படவில்லை. ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இதனால் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலை ஏற்பட்டால் நாடு மேலும் சிக்கலை எதிர்கொள்ளும். எனவே, நாட்டு நிலைமையை கருதியே பதவி ஏற்கும் முடிவை ரணில் எடுத்துள்ளார் ரணில் என தெரியவருகின்றது. ஜனாதிபதியை இன்று சந்தித்து பேச்சும் நடத்தியுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version