அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஹரின் விலகல்!

Published

on

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும், தற்போது சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படவுள்ளார் எனவும் ஹரின் பெர்னாண்டோ எம்.பி. ஊடகங்களிடம் கூறினார்.

இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மிகவும் சூடுபிடித்தது.

நாட்டில் நிலவும் அராஜக நிலையைப் போக்குவதற்கு கட்சி என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் பலரும் கட்சித் தலைவரிடம் யோசனை தெரிவித்துள்ளனர்.

எனினும், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடமிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இதேவேளை, இந்தக் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கட்சியை விட்டு விலகுகின்றார் என்று கட்சித் தலைவரிடம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் பின்னணியில் அவர் அக்கட்சியை விட்டு விலகுகின்றார் என்று தெரியவந்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version