அரசியல்
பிரதமர் இன்று பதவி விலகுவார்! – ஜகத் குமார தெரிவிப்பு
” பிரதமர் மஹிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட பிறகு இன்று பதவி விலகுவார்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரிமாளிகை முன்பாக போராட்டம் இடம்பெறுகின்றது. அதற்கு சமாந்தரமாகவும் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்பதற்கு வருகை தந்திருந்தபோதே ஆளுங்கட்சி எம்.பியான ஜகத் குமார மேற்படி தகவலை வெளியிட்டார்.
You must be logged in to post a comment Login