அரசியல்

கோரிக்கைகளுக்கு இணங்கினால் இடைக்கால அரசுக்கு ஆதரவு! – சஜித் தெரிவிப்பு

Published

on

” இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி இணங்கினால், தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு ஆதரவு வழங்க தயார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சட்டத்தரணிகள் சங்கத்துடனான பேச்சு சாதகமாக அமைந்தது. எம்முடனான சந்திப்பின் பின்னர், ஜனாதிபதியை சந்திக்க சட்டத்தரணிகள் சென்றுள்ளனர். அதன்போது ஜனாதிபதியால் வழங்கப்படும் உறுதிமொழிக்கமையவே அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும்.” எனவும் சஜித் அறிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version