அரசியல்
நிலைமை மேலும் மோசமடையும்! – அரசுக்கு கஜேந்திரகுமார் எச்சரிக்கை
“அரசு, அவசரகால நிலையை மீண்டும் பிரகடனப்படுத்தியுள்ளதால், நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் மோசமான தாக்கம் ஏற்படும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அரசு மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சிகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
You must be logged in to post a comment Login