அரசியல்

மஹிந்த இல்லையேல் நாம் இல்லை! – எதிரணியில் சேருவோம் என்கிறார் ஜகத்

Published

on

” மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிரணியில் அமரும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சிலர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்கின்றனர், மேலும் சிலர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்கின்றனர். இருவரும் இருக்கக்கூடாது என சிலர் பிரச்சாரம் முன்னெடுக்கின்றனர்.

21 ஐ முன்வைத்து அதிகாரங்களை குறைக்க முற்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ச இல்லாத அரசில் நாம் இருக்கமாட்டோம். அவர் தலைமயில் எதிரணியில் அமர்வோம்.” – என்றும் ஜகத் குமார குறிப்பிட்டார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version