இலங்கை

பூநகரி பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!

Published

on

130 கிலோ கேரளக் கஞ்சா கிளிநொச்சி – பூநகரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பட்டப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட குறித்த கஞ்சா பொதிகள், வேறு இடங்களுக்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி – வேரவில் பிரதேச பற்றைக்காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதிகள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version