அரசியல்

ராஜபக்ச அரசுக்கு எதிரான பிரேரணையில் 120 பேர் கையொப்பம்!

Published

on

ராஜபக்ச அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைத்த அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க,

“நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்தப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சகல தரப்பினரும் கலந்துரையாடி இணங்கியுள்ளனர்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அரசில் இருந்து விலகியுள்ள சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளனர்” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version