அரசியல்
11 கட்சிகளுக்கு இடையிலான விசேட கூட்டம் இன்று!
11 கட்சிகளுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.
சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் இணக்கம் எனவும், அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் 11 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஆராய்ந்து, திட்டத்தை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 11 கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று ஜனாதிபதியையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
You must be logged in to post a comment Login