அரசியல்

18 ஆவது நாளாகத் தொடரும் காலிமுகத்திடல் தன்னெழுச்சி!

Published

on

“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

ஜனாதிபதி மற்றும் அரசைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கட்சி, இன, மத, மொழி பேதமின்றி மக்கள் அலையெனத் திரண்டு பங்கேற்று வருகின்றனர்.

இளைஞர் – யுவதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு குறித்த பகுதியில் கூடியிருந்த மக்கள் வெவ்வேறு செயற்பாடுகளின் ஊடாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version