அரசியல்

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி கடிதம்!!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென தெரியவருகின்றது.

தற்போதைய நிலைவரத்தை தெளிவுபடுத்தியும், மேலும் சில காரணங்களை முன்வைத்துமே மேற்படி அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென அறியமுடிகின்றது.

மகாநாயக்க தேரர்களால் பல யோசனைகளை உள்ளடக்கிய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை செயற்படுத்தாததால் மகாநாயக்க தேரர்கள் அரசுமீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.

கூட்டு சங்க பிரகடனத்தை வெளியிடவும் தயாராகினர். இந்நிலையிலேயே ஜனாதிபதியால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version