அரசியல்

ஆடிய ஆட்டம் அடங்கும்; அரசு கவிழ்ந்தே தீரும்! – பொன்சேகா சூளுரை

Published

on

“ராஜபக்ச அரசு ஆடிய ஆட்டங்கள் அடங்கப் போகின்றன. இந்த அரசைக் கவிழ்க்கும் எமது பிரேரணை வெல்லப்போகின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பெரும்பான்மைப் பலம் கிடைத்துள்ளது.

எதிரணியில் உள்ளவர்களும் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படுவர்களும் மற்றும் அரசுக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களும் என 113 இற்கும் மேற்பட்டோர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகவுள்ளனர்.

எனவே, இந்த அரசு உடனடியாகக் கெளரவமாகப் பதவி விலக வேண்டும். இல்லையேல் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக இந்த அரசை அகற்றுவோம்” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version