அரசியல்

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கு ஆதரவாம்! – 40 எம்.பிக்கள் குழு அதிரடி

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால அரசு அமைக்கப்படவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீனக் குழு கவனம் செலுத்தியுள்ளது என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கட்சியினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பிக்களே இவ்வாறு தீர்மானித்திருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

அந்த சுயாதீனக் குழு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையுமாயின், இடைக்கால அரசை நிறுவுவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் அந்தக் குழு கலந்துரையாடியுள்ளது என்றும் தெரியவருகின்றது.

இடைக்கால அரசின் அமைச்சரவை 20க்கு கீழ் மட்டுப்படுத்திக்கொள்வது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version