அரசியல்

வீதித்தடைகளால் பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதம்!

Published

on

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் காலிமுகத்திடலை நோக்கிவரும் நிலையில், கொழும்பில் பல இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி வீதித்தடைகளைப் பொலிஸார் போட்டுள்ளனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதிக்கு அருகில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், காலிமுகத்திடல் போராட்டக் களத்தை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் செல்கின்றனர்.

அதேநேரம், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவிருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பேரணியாக செல்லும் வழியில் லோட்டஸ் வீதிக்கருகே போடப்பட்டிருக்கும் வீதித் தடைக்கருகில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version