இலங்கை

யாழ். போதனாவில் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு!

Published

on

யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையிலும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான 13 மருந்துகள், அவசரமாகத் தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் மற்றும் ஆய்வுகூடத்துக்குத் தேவையான 6 மருந்துகள் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version