அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! – நாடாளுமன்றில் அஞ்சலி

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்எ ன வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கறுப்பு ஆடை அணிந்து இன்று சபை அமர்வில் பங்கேற்றனர்.

இவ் வருடத்திலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிரணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணை நிலைமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபைக்கு தெளிவுபடுத்தினார்.

#SriLankaNews

Exit mobile version