இலங்கை
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் திடீர் வீழ்ச்சி!
இலங்கையில் கடந்த 3 தினங்களாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு சுமார் 4 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 1,300 பயணிகளே வருகை தந்துள்ளனர் என்று அந்தச் சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதனால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், வீதிப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
You must be logged in to post a comment Login