அரசியல்

இலங்கையை மீட்க சீனாவின் ஆதரவு தேவை! – சஜித் கோரிக்கை

Published

on

இலங்கையை தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்கச் சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தப் பேரிடர் தருணத்தில் இலங்கைக்குச் சகோதரத்துவக் கரம் நீட்டும் சீனாவுக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால இரு தரப்பு உறவுகளையும் இதன்போது நினைவு கூர்ந்தார்.

இலங்கையைத் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்காகச் சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையீடு செய்யுமாறும் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version