இலங்கை

இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த 2 சகோதரர்கள் கைது!

Published

on

சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தினூடாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த இரு இளைஞர்கள் நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

மன்னார் – பேசாலையை சேர்ந்த 30 மற்றும் 32 வயதான சகோதரர்களே நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப் படகொன்றில் சென்றபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்த்தனர்.

நெடுந்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version