அரசியல்

நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம்!

Published

on

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘தமிழ் நாடி’யிடம் உறுதிப்படுத்தினார்.

குறித்த பிரேரணையில் நேற்றைய தினமும் சில எம்.பிக்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த நடவடிக்கை தொடரவுள்ளது.

” தக்க தருணம் பார்த்து, ஆளுந்தரப்பின் ஆதரவும் எமக்கு கிடைக்கும். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல் இருக்காது.” – எனவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version